370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு!

Default Image

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .

ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் மற்றும்  லடாக் ஆகியவை  இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும்  என அமித்ஷா அறிவித்தார்.

இதனிடையில் மாநிலங்களவையில் கடும் அமளியும் எதிர்ப்பும் கிளம்பியது. காஷ்மீர் அதன் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என அமித்ஷா கூறினார் .

மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் ,  எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.மக்களவையில் இந்த  மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் , எதிராக 72 வாக்குகளும் வாக்களித்தனர். இறுதியாக இந்த மசோதா  மக்களவையிலும் , மாநிலங்களவைலும் இரண்டிலும்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .அந்த அரசாணையில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசாணையை வெளியிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்