இந்திய வான்வெளியை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறை பயணமாக இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக இலங்கைக்கு முதன் முறையாக செல்ல உள்ளார். இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்தி செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரெஷி மற்றும் தொழிலதிபர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து உள்ளார். இவர்களது சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்காத நிலையில், இம்ரான் கானுக்கு தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…