2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை; பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி..!

Published by
Edison

2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதனையடுத்து,கடந்த மே மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்தப் பணியில்,கோவாக்சின்,கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில்,கொரோனா மூன்றாவது அலையானது குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால்,2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்தினை பரிசோதிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

இதனையடுத்து,2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த பரிசோதனைகள் டெல்லி,பாட்னா,நாக்பூர் உள்ளிட்ட 525 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ)  கூறுகையில்,”விரிவான ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப்பின்,2 வயது முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நடத்திக் கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மருத்துவ நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.எனினும்,இரண்டாம் கட்ட பரிசோதனை அறி்க்கையை சமர்பித்த பின்னரே மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, எனத் தெரிவித்துள்ளன.

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

13 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago