குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, போக்சோ சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தண்டனைகளை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலும், பல குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகாரிக்கும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக விளக்கினார். சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை விதிக்க, கடந்த 2012ல் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா பகுதியில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, இந்த சம்பவத்தை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…