அகமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.67.07 கோடியும், டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் ரூ .64.78 கோடி வங்கி மோசடி செய்தது தொடர்பாக இரண்டு தனித்தனியான வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் சில்வாசா உள்ளிட்ட இடங்களில் உள்ள கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம்,அதன் இயக்குநர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.67.07 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட், அதன் இயக்குநர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி மற்றும் நொய்டாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆல்பைன் ரியல்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குநர்கள், பஞ்சாப் & சிந்து வங்கி அளித்த புகாரின் பேரில் இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 64.78 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள் மீது வங்கி நிதிகளை திசை திருப்புதல் அல்லது பறிமுதல் செய்தல், முறைகேடு செய்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…