துண்டு துண்டாக வெட்டப்பட்டாரா வங்கதேச எம்.பி? வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…

Published by
மணிகண்டன்

மேற்கு வங்கம்: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில் அவரது உடல் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசம் அவாமி லீக் கட்சி எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என அவரது நண்பர் புகார் அளித்து இருந்தார்.

14ஆம் தேதிஅன்வருல் ஆசிம் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் நியூ டவுண் பகுதியில் அன்வருல் ஆசிம் அனார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆசிம் மரணத்தை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஆசாதுஸ்மான் கான் உறுதிப்படுத்தினார்.

தற்போது இந்த கொலை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்னும் அன்வருல் ஆசிம் உடல் கிடைக்கவில்லை. அவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கலாம் என இந்த வழக்கை விசாரித்து வரும் மேற்கு வங்க புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேற்கு வங்கம், நியூ டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தில் அன்வருல் ஆசிம் காணப்பட்டார் என சிசிடிவி காட்சிகள் வாயிலாக புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர். இதனால், அவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே கொலை செய்யப்பட்டு, அவரது உடலை தோலுரித்து, வெட்டப்பட்டு அதனை பல்வேறு துண்டுகளாக பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து அப்புறப்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகின்றனர்.

மேற்கு வங்க புலனாய்வுத்துறையினர், அன்வருல் ஆசிமை  ஒரு பெண் நியூ டவுன் பகுதி அடுக்குமாடி குடியிருப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டார் என்றும், பின்னர் கொலையாளிகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார் என்றும், இது தொடர்பாக ஷிலஸ்தி ரஹ்மான் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் வங்கதேச செய்தி நிறுவனமான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது..

முதற்கட்ட விசாரணையில், அன்வருல் ஆசிம் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடியுரிமை கொண்ட அக்தருஸ்ஸாமான் ஷாஹின் என்பவர் தான் , கொலையாளிகளுக்கு சுமார் 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் கொலையாளி என நம்பப்படும் ஜிஹாத் ஹவ்லதார் எனும் நபரையும் மேற்கு வங்க புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் மேலும் 4 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

36 minutes ago

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

1 hour ago

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

1 hour ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

9 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

11 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

11 hours ago