நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்!

Published by
Rebekal

நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வந்தாலும், ஆந்திராவின் நீதித்துறைக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது சில சர்ச்சைகளை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டசபை சபாநாயகர் தம்பினேனி  சீதாராம் மற்றும் துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மற்றும் பலர் உட்பட சமூக வலைதளங்களில் நீதித் துறைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீதான புகார்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து சிலர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதிகள் ராகேஷ் குமார் மற்றும் உமாதேவி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் நீதித் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர்கள் மீது மாநிலக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

3 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

5 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

7 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

7 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

8 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

9 hours ago