மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி…!!

Default Image

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நகரில், 2 மாடி கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகினார். படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர், கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோரகான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்