தொடரும் ஆணவக் கொலை.. காதல் திருமணம் செய்த அக்காவை கொலை செய்த தம்பி!

Published by
Surya

கர்நாடகா மாநிலம், கரடகியில் வசித்து வந்த வினோத் – திரிவேணி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களை திரிவேணியின் தம்பி உட்பட சிலர், கொலை செய்தனர்.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத். இவர் கொப்பல் மாவட்டத்தில் கரடகி எனும் இடத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், பாகல்கோட்டையை சேர்ந்த திரிவேணி எனும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் நாளடைவில் இரும்பு போல வலுவாக இருந்தது.

இந்தக் காதல் திரிவேணியின் வீட்டிற்கு தெரியவர, அவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையும் மீறி திரிவேணி வீட்டை விட்டு வெளியேறி, வினோத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.இதனையடுத்து வினோத் – திரிவேணி தம்பதியினர், கரடகியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 17 ஆம் தேதி வினோத் – திரிவேணி இருவரும் தங்களின் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்கள். அப்பொழுது அவர்களை வழிமறைத்த சிலர், இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கி, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த திரிவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, வினோத் உயிருக்கு போராடி வந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரடகி போலீசார், பலத்த காயமடைந்த வினோத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்கள். மேலும், திரிவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பொழுது திரிவேணி, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் அவரையும், அவரின் கணவர் வினோத்தையும் திரிவேணியின் தம்பி அவினாஷ் உள்ளிட்ட சிலர் இரும்பு கம்பியால் தாக்கியது போலீசாருக்கு தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவினாஷை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழக்க, தலைமறைவான சிலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம், கரடகியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
Surya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago