நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை… ராஜ்நாத்சிங் வாழ்த்து…

நீண்டதூரம் சென்று இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை இன்று காலை ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இன்று சோதித்துப் பார்க்கப்பட்ட ஏவுகணை 400 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, டிஆர்டிஓ-வுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர், தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், ”பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணையின் மூலம் பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024