Categories: இந்தியா

கால் அறுவை சிகிச்சைக்கு சென்ற சிறுவன் …! தவறி விருத்தசேதனம் செய்த மருத்துவர்கள்!

Published by
அகில் R

மஹாராஷ்டிரா: சமீபத்தில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தானே மாவட்டத்தில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு தவறுதலாக விருத்தசேதனம் செய்யப்பட்டதாக அச்சிறுவனின் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் பேசுகையில், “ஷாஹாபூரில் உள்ள ஒரு குடிமைப் பள்ளியில் எனது மகன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். இந்த ஆண்டின் மே மாதத்தின் கடைசி வாரத்தில், என் மகன் பள்ளிக்குச் சென்று காலில் காயத்துடன் திரும்பி வந்தான்.

என் மகனிடம் விசாரித்த போது அவனும் அவனது வகுப்பு தோழர்களும் விளையாடும் பொழுது இடது காலில் தவறுதலாக கல் பட்டு காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் என் மகனை துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு என் மகனுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பின் வீடு வந்த பிறகு காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து சீழ் வெளியேற தொடங்கியது. எனவே, மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு அவரை சிகிச்சை செய்த மருத்துவர் காயம் ஆழமாக பட்டுள்ளதால் இதற்கு அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.

இதனால், கடந்த ஜூன் 15-ம் தேதி, சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தோம் பின் ஜூன் 17-ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் பிறகு அறிவித்த நாளில் என் மகனுக்கு அறுவைசிகிச்சை நடந்து ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.

அப்போது தான் அவர்கள் காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி, விருத்தசேதனம் செய்ததை அறிந்தேன். இதை பற்றி மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மீண்டும் உடனே என் மகனை உள்ளே அழைத்துச் சென்று சரியாக காலில் ஆபரேஷன் செய்தனர்.

இது குறித்து மருத்துவர்களிடம் மேற்கொண்டு கேட்ட போது, அவர்கள் அலட்சியமாக இதே வயதில் வேறு சிறுவர்கள் இருந்ததால் குழப்பம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.

மேலும், உங்கள் மகனுக்கும் ஆணுறுப்பில் தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த விருத்தசேதனம் அறுவை சிகிச்சையால் நல்லதுதான் செய்திருக்கிறோம் என தவறையும் ஒப்புக்கொள்ளாமல் சமாளிக்கின்றனர்” என கூறினார்.

மேலும் இது தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தானே சிவில் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் கைலாஸ் பவார் மேற்பார்வையில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் மருத்துவத்துறையின் அலட்சியத்தை காட்டுவதோடு சற்று பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

11 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

12 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

12 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

12 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

13 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

14 hours ago