Categories: இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 100 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டனர்.

சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்த லாலா ராம் சாகு என்பவற்றின் 11 வயது மகன் ராகுல் சாகு, கடந்த ஜூன் 10ம் தேதி மதியம் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அருகே சென்றே போது எதிர்பாராத விதமாக தவறி அதில் விழுந்தார். இதனிடையே, சிறுவனின் தந்தை லாலாராம் சாகு தனது வீட்டின் பின்பு 80 அடிக்கு போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்து இருந்தார்.

இதனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து வந்தாக கூறப்படுகிறது. இதன்பின் ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றிய நிலையில், போர்வெல் பயன்பாடு இன்றி, மூடப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக 11 வயது சிறுவன், அந்த போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அடுத்து, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் துணியை பயன்படுத்தி மீட்க முயன்ற நிலையில், அவர்களால் முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாலை 4 மணிக்கு மீட்பு பணயை தொடங்கினர். சிறுவனை மீட்க போர்வெல்லின் பக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி ஒருபக்கம் நடைபெற்ற நிலையில், மறுபக்கம் சிறுவனின் சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜன், குழாய் மூலம் வழங்கப்பட்டது. கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணி தீவிரமடைந்த நிலையில், மாநில, தேசிய பேரிடர் படையினர், ராணுவம், போர்வெல் மீட்பு சிறப்பு வல்லுனர்கள் ஆகியோர் மீட்பு பணியில் இணைந்தனர்.

இவர்கள் கம்ப்யூட்டர், கேமரா உதவியுடன் சிறுவனின் அசைவுகளை மேல் இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதன்பின் சுமார் 104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நேற்று இரவு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், சிறுவனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறுவன் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago