5 மருத்துவர்கள் முன்னிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ள மடாதிபதியின் உடல்…!

Published by
Rebekal

இன்று மடாதிபதி நரேந்திர கிரியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக சொரூப ராணி நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதியா அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி நேற்று முன் தினம்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை தொடர்பாக சிக்கிய கடிதத்தின் அடிப்படையில் அவரது சீடர் ஆனந்த கிரி உட்பட மூவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முழுவதும் அஞ்சலிக்காக மடாதிபதி நரேந்திர கிரியின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது உடல் சொரூப ராணி நேரு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு வீடியோ ஆதரத்துடனும், ஐந்து மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, நரேந்திர கிரியின் உடல் மடத்து சீடர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனவும், மகானின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. அது போல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சீடர் ஆனந்த கிரி உட்பட மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

44 seconds ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

46 minutes ago

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

1 hour ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

1 hour ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

2 hours ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

3 hours ago