எச்சரிக்கை!கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்..!

Published by
Edison

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதால்,அதன் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகும் போது,அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இதனால்,நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது,இதன்காரணமாக ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது.

மேலும்,இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டால் கண்,மூக்கு, மூளை,ஆகியவை பாதிக்கப்படும்.சில நேரங்களில்,பாதிக்கப்பட்ட உடல் உறுப்பையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இந்நிலையில்,மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 13 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

இதனால்,கருப்பு பூஞ்சை நோயினை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ‘அம்ஃபோடெரிசின் பி’ என்ற மருந்தினை பரிந்துரைக்கின்றனர். இதன்காரணமாக, இந்த மருந்தின் தேவை சில மாநிலங்களில் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து,மத்திய அரசானது ‘அம்ஃபோடெரிசின் பி’ மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக,அதன் தயாரிப்பாளர்களுடன்  இணைந்துள்ளது.மேலும்,வெளிநாடுகளில் இருந்து இந்தக் குறிப்பிட்ட மருந்தின் இறக்குமதியை அதிகரித்து,உள்நாட்டில் அதன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

21 minutes ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

58 minutes ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

3 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

3 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

3 hours ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

4 hours ago