பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜக தலைமை எடுத்த முடிவின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, பி.எஸ்.எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போதும் உணர்ந்தது? பி.எஸ்.எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கு தெரியும். மாற்றப்பட வேண்டியவர்கள் அதிகம், ஹரியானா, கோவா, திரிபுரா… பட்டியல் நீளமானது என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…