செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் பாஜக மும்முரமாக உள்ளது – ப.சிதம்பரம்

Default Image

பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது.

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜக தலைமை எடுத்த முடிவின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, பி.எஸ்.எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போதும் உணர்ந்தது? பி.எஸ்.எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கு தெரியும். மாற்றப்பட வேண்டியவர்கள் அதிகம், ஹரியானா, கோவா, திரிபுரா…  பட்டியல் நீளமானது என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்