குஜராத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி மன்ற வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக அனைத்து 31 மாவட்ட பஞ்சாயத்துகளையும் வென்றுள்ளது.மேலும், 81 நகராட்சிகளில் 70 யையும் , மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸை விட மிகவும் முன்னிலையில் பெற்றுள்ளது. மொத்தம் 8,474 இடங்களில் 6,110 இடங்களை பாஜக வென்றுள்ளது.
காங்கிரஸ் 1,768 இடங்களை மட்டுமே பெற முடியும் என்ற எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது.மேலும் மூன்று நகராட்சிகளை மட்டுமே வென்றுள்ளது, ஆனால் எந்த மாவட்ட பஞ்சாயத்திலும் காங்கிரஸால் கணக்கு திறக்க முடியவில்லை.
இதனால் குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக வந்துள்ளது.
எங்கள் பிரச்சாரத்தின்போது மக்களிடமிருந்து எங்களுக்கு நல்ல ஆதரவுகள் கிடைத்தன, ஆனால் முடிவுகள் அதைப் பிரதிபலிக்கவில்லை. மக்கள் ஈ.வி.எம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர், இந்த விஷயங்கள் அனைத்தும் ஆராயப்பட வேண்டும்” என்று சவ்தா கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…