கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி வழங்கப்படும் என்று கர்நாடகவின் பிஜாப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.மேலும்,ஒவ்வொரு நாளும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயத்தில்,கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இறப்பு ஏற்படும் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் போன்ற சில வதந்திகளால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர்.
இந்த நிலையில்,கர்நாடக மாநிலத்தின் பிஜாப்பூர் மாநகராட்சியானது,கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்றும்,மேலும்,தடுப்பூசி போட்டுகொள்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளது.
மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில்,இந்த வித்தியாசமான முயற்சியை செய்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…