வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை இணைத்து அவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே எஸ்பிஐ-யுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதுபோல் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக்க, வங்கிகள் இணைப்பு திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டி கேட் வங்கி கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கி ஆகியவை யூனியன் வங்கியுடனும் இணைக்கப்பட உள்ளது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படவுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் வருமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அமலுக்கு வரும் என்றும் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…