சாக்கடைக்குள் கிடந்த பெண் குழந்தை!காப்பாற்றிய நாய்கள்!

Default Image

ஹரியானாவில் கைதால் நகரில் பாதாள சாக்கடை அருகில் சுற்றி திரிந்த நாய்கள் ரெத்தவாடையில் கிடந்த ஒரு பையை வெளியே எடுத்து போட்டு குரைத்தன.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்தத்தோடு ஒரு பை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பையை கைப்பற்றினர்.

அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அந்த குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை 1 கிலோ 100 கிராம் இருப்பதாகவும் குழந்தைக்கு உரிய சிகிக்கை அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் உள்ள சி சி டிவி கேமராவை பார்த்தபோது அதில் ஒரு பெண் சாக்கடைக்குள் ஒரு பையை வீசி சென்றது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பெண்ணையும் ,குழந்தையின் புகைப்படத்தையும் போட்டு தேடி வருகின்றனர்.இந்நிலையில் அந்த பெண் பிடிபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்