டெல்லியை சேர்ந்த மஞ்சு கோயல் (44) விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 6 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். அங்குள்ள சில வீடுகளில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மஞ்சு வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ் பஹ்வா தனது வீட்டிலிருந்து மஞ்சு ரூ. 3,00000 திருடியதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சதீஷ் பஹ்வா மற்றும் அவரது மகன் பங்கஜ் இருவரும் சேர்ந்து மஞ்சுவை கடுமையாக தாக்கினர்.அதில் மஞ்சு படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் மஞ்சு சகோதரர் முகேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உனது சகோதரி எனது வீட்டில் திருடி விட்டார். அதனால் அவரை அடித்து உள்ளோம் எனக் கூறினார். தகவலறிந்து அங்கு வந்த மஞ்சுவின் சகோதரர் படுகாயமடைந்த மஞ்சுவை வீட்டுக்கு கொண்டு சென்றார். பின்னர் மருத்துவர் வீட்டுக்கு வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முகேஷ் கூறுகையில் , சதீஷ் மற்றும் அவரது மகன் பங்கஜ் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனது சகோதரியை அடித்துக் கொன்று விட்டார்கள் மேலும் சகோதரியிடம் இருந்து 60,000 பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஸ் மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…