அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.
மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது.
ஏலத்தில் அதானி நிறுவனம்:
இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது.
அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக விலையை நிர்ணயித்தது.இதனால்,இரண்டு டெண்டர்களும் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
என்ன விலை?:
அதன்படி,கடந்த மாதம் 5,00,000 டன் தென்னாப்பிரிக்க நிலக்கரியை ஒரு டன்னுக்கு ரூ. 40,000 ($526.50) மற்றும் ஜனவரியில் ரூ. 17,480 ($230.08) விலையில் வழங்குவதாக அதானி நிறுவனம் அறிவித்தது.
ஆந்திர அரசு அதிரடி:
இந்நிலையில்,அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி இறக்குமதிக்கான இரண்டு டெண்டர்களை ஆந்திரப் பிரதேச மாநில அரசு ரத்து செய்துள்ளது.நிலக்கரிக்கான விலையை அதிகமாக நிர்ணயித்ததனால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
விலை உயர்வை காரணம் காட்டி டெண்டர்களை ரத்து செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…