ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் பிரதான் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு தனது 64வது வயதில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை, ஜெய் கிஷோருக்கு 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு பிரிவில் அரசு நடதத்க்கூடிய சுரேந்திர சாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று முதல் வருட மருத்துவ மாணவராக சேர்க்கை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாட்டின் மருத்துவ கல்வி வரலாற்றிலேயே நிகழ்ந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றுதான் இதுபோன்ற வயதில் மூத்த ஒருவர் மருத்துவ மாணவராக சேர்க்கை பெறுவது என அப்பல்கலைக்கழகத்தின் இயக்குனர் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் அவரது மகள்களில் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தது தான் அவர் நீட் தேர்வு எழுதி மருத்துவராக உருவாகுவதற்கான ஆசையை தூண்டி இருக்கும் எனவும் அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…