தாயின் சடலத்துடன் ஒரு வாரமாக படுத்திருந்த 54 வயது மகன்!

Published by
Rebekal

உயிரிழந்த தனது தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட 54 வயது மகன் ஒரு வாரமாக ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் எனும் பகுதியில் தனது 54 வயது மகனுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் உள்ளனராம். அவருடன் வசிக்கும் 54 வயது மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது 54 வயது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயற்கையாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது மகன் அந்த தாய் உடனேயே ஒரு வார காலமாக அந்த வீட்டிலிருந்துள்ளார்.

அண்டை வீட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பெண்மணியின் வீட்டுக்கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்த போது கிட்டத்தட்ட இறந்து ஒரு வாரத்திற்கு  மேலாக இருக்க கூடிய சிதைந்த நிலையிலான பெண்மணியின் சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது அவரது 54 வயது மன நோயாளியான மகனும் தனது தாயுடன் இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு வாரமாக உணவின்றி சரியான கவனிப்பு இன்றி மிக மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக உடல் சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றிய போலீசார், அவரது மகனையும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அப்பெண்மணியின் மரணத்திற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

32 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

41 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

50 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

58 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago