அபார திறமைக்காக ஆசியா மற்றும் இந்தியாவின் ரெக்கார்டில் இடம் பிடித்த 13 வயது சிறுமி!

Default Image

கண்களை காட்டிக்கொண்டே எழுத, படிக்க மற்றும் ரூபி கியூப் கட்டைகளையும் தீர்க்கும் அபார திறமைக்காக 13 வயது சிறுமி ஆசியா மற்றும் இந்தியாவின் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய சுஜித் அனுபமா தம்பதியினரின் 13 வயது மகள் தான் தனிஷ்கா. இவர்கள் அந்த பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றும் வைத்து நடத்தி வருகிறார்களாம். பொதுவாக போலீசின் மகன் திருடன், ஆசிரியரின் மகன் மக்கு என  கூறுவார்கள்,பல இடங்களிலும் அப்படி தான் நடக்கும். ஆனால், பள்ளிக்கூடம் நடத்தும் சுஜித் அனுபமா தம்பதியினரின் மகள் அப்படியல்ல, 13 வயது மட்டுமே கொண்ட தனிஷ்கா அபரா திறமை மற்றும் அறிவாற்றல் அதிகம் கொண்டவராக தான் இருக்கிறார்.

ஏனென்றால் இவர் அதிவேக கற்றல் திறன் கொண்ட காரணத்தினால் அம்மாநில கல்வித்துறையின் சிறப்பு அனுமதியுடன், 11 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வும், 12 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்வும் எழுதியவராம். தற்பொழுதும் கண்களை மூடி கொண்டு படிப்பதும், எழுதுவதும் மற்றும் ரூபி கியூப் கட்டை விளையாட்டை ஈசியாக தீர்ப்பதும் போன்ற அபார திறமைக்காக இவர் இந்தியா மற்றும் ஆசியா ரெக்கார்டு புக்கில் இடம் பெற்று பெற்றோர்களுக்கும் மத்திய பிரதேசத்துக்கு இந்தியாவுக்கும் கூட பெருமை சேர்த்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh