இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்த 116 வயது முதியவர்
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தரப்பினரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், அஸ்ஸாம், கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட கட்லிசேரா கிராமத்தை சேர்ந்த முதியவர் மஹ்மூத் அலி. இவருக்கு வயது 116. இவரது உடல்நிலையை பொறுத்தவரையில், கால்கள் நடக்க இயலாத நிலையில் உள்ளதால், மற்றவரின் உதவியுடன் தான் எங்கு வேண்டுமானாலும் செல்லுவார்.
இந்நிலையில், நாளை வாக்களிக்க உள்ள இவரை நாற்காலியின் உதவியுடன் தூக்கி வரவுள்ளார்கள். இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த தள்ளாடும் வயதிலும் தாம் வாக்களிப்பதை இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.