ஹைதராபாத்தை சேர்ந்த 110 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு, இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இளம் வயதினருக்கு கொரோனா வந்து விட்டாலே அது குறித்த அச்சத்தில் யோசித்து யோசித்து பயந்தே உயிரிழந்து விடுகிறார்கள். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த 110 வயதுடைய முதியவர் தற்பொழுது கொரோனாவிலிருந்து மீண்டு பிறருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
ராமானந்த தீர்த்த எனும் 110 வயது முதியவர் கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் பரிசோதனை செய்த பொழுது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாராம் அவர்கள், இன்னும் சில தினங்களில் அவர் சாதாரண படுக்கைக்கு மாற்றப்படுவார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…