தானே ரயில் நிலையத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகளை வெட்டி ஒரு பையில் வைத்து வேறு இடத்தில் வீசிவிட ஆட்டோவில் எறியுள்ளார். பையில் துர்நாற்றம் அடிக்கிறது என ஆட்டோக்காரர் சந்தேகத்துடன் கேட்க உடனே அங்கிருந்து தப்பிவிட்டார் அந்த நபர்.
அந்த ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், வீசிச்சென்ற அந்த பையை போலீசார் ஆராய்ந்தனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் தலையில்லாமல் இருந்துள்ளது. பிறகு அந்த நபரை தீவிரமாக தேடிய போலீசார் 30 மணிநேரத்தில் அந்த நபரை கைது செய்தனர்.
அந்த நபரிடம் விசாரித்தபோது, அந்த நபர் பெயர் அரவிந்த் திவாரி எனவும், அவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார் எனவும், அவர்க்கு 4 பிள்ளைகள் இதில் முதல் பிள்ளை பெயர் பிரின்சி. இவர் வேற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். அது திவாரிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. சம்பவத்தன்று சண்டை பெரியதாகி, கத்தியால் பிரின்சியை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். பின்னர் அவரது துண்டுதுண்டாக வெட்டி பையில் போட்டு பிவண்டி என்ற இடத்தில் வீசுவதற்காக, தானே ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அப்ப்போதுதான் ஆட்டோ ஓட்டுனரின் சந்தேகத்தின் பெயரில் இந்த கொடூர குற்றவாளி திவாரி சிக்கி கொண்டார். இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…