அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்து மொழிகளில் பாடப்புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் இருக்க வேண்டும் – மத்திய அரசு..!

Published by
murugan

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்திய மொழிகளில் ஒவ்வொரு பாடத்தையும் (Study Material ) டிஜிட்டல் முறையில் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளில் பள்ளி மற்றும் உயர்கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கான (Study Material )பாடத்தையும் டிஜிட்டல் முறை கிடைக்கச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி அமைச்சகம் இன்று  வெளியிட்ட அறிக்கையில், “UGC, AICTE, NCERT, NIOS, IGNOU மற்றும் IITகள், CUகள் மற்றும் NITகள் போன்ற INI தலைவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்துப் படிப்புகளுக்கும் இந்திய மொழிகளில் (Study Material ) கிடைக்கச் செய்ய வேண்டும். யுஜிசி (UGC),  ஏஐசிடிஇ (AICTE) மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவை மாநிலப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினையை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020, பாரதத்தின் பன்மொழித் தன்மையே அதன் மிகப்பெரிய சொத்து மற்றும் பலம் என்ற கருத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது. அதன் சமூக-கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு திறமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். “உள்ளூர் மொழிகளில் பாடப்புத்தகத்தை  உருவாக்குவது, இந்த பன்மொழிச் சொத்தை உயர்த்தி, 2047-க்குள் நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற ‘விக்சித் பாரத்’ க்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இந்த திசையில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது என்றும் , பொறியியல், மருத்துவம், சட்டம், யுஜி, பிஜி  புத்தகங்களின் மொழிபெயர்ப்பு அனுவாதினி AI அடிப்படையிலான செயலி மூலம் செய்யப்படுகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்தப் புத்தகங்கள் ekumbh இணையதளத்தில்  கிடைக்கின்றன. பள்ளிக் கல்விச் சூழல்களுக்கு ஏற்றவாறான குறிப்பேடுகள் DIKSHA செயலியில்  பல இந்திய மொழிகளில் உட்பட 30 க்கு மேற்பட்ட  மொழிகள் கிடைக்கும் . JEE, NEET, CUET போன்ற போட்டித் தேர்வுகள் 13 இந்திய மொழிகளில் நடைபெற்று வருகின்றன”  என கூறியுள்ளது.

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

3 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

3 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

4 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

6 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

6 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

6 hours ago