நாட்டையே அதிரவைத்துள்ள டெல்லி கொலையில் கைதுசெய்யப்பட்டுள்ள அஃப்தாப் அமின் பூனாவாலா மீதான பொய் கண்டறிதல் சோதனை என்றும் அழைக்கப்படும் பாலிகிராஃப் சோதனையின் மீதமுள்ள இரண்டு அமர்வுகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என , PTI செய்தி வெளியிட்டுள்ளது.
பூனாவாலா ஏற்கனவே மூன்று அமர்வுகளுக்கு உட்பட்டுள்ளார், கடைசியாக வெள்ளிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.அவரது நார்கோ சோதனை டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவித்தன.
அஃப்தாப் தனது லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தா வால்கரை கொடூரமாக கொன்று அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை அவர் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி இல்லத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தார்.
பின்னர் பல நாட்களாக அவற்றை நகர் முழுவதும் நகரின் பல இடங்களில் வீசியுள்ளார்.கடந்த நவம்பர் 12 அன்று கைது செய்யப்பட்ட அஃப்தாப்பிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…