காஷ்மீரில் பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அப்பகுதியியல் ரகசிய சோதனை நடத்தினார்கள். அப்பொழுது அங்கிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள், எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025