ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு – 3 போலீசார் உயிரிழப்பு!

Published by
Rebekal

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கித் தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் மாவட்டம் பட்காம் எனும் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது திடீரென மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த 3 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஜனிக்காம் எனும் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டர் சம்பவத்தின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

இதில் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். மேலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஸ்ரீநகரில் உள்ள பர்சுலா பகத் எனும் இடத்தில துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் 2 போலீசாரை சுட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசாரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago