அசாம் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் தேசிய விடுதலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள மேற்கு கர்பி அங்லாங் மாவட்டம், நாகலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் டி எம் எல் ஏ தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தின் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தேடுதல் வேட்டைக்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோனாவால் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் மொத்தமாக சென்றுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் தங்களை நெருங்கி வருவதை அறிந்த திமாசா படையை சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் தீவிரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…