ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளில் 2 பேரை சுட்டுக்கொன்ற எல்லைப் பாதுகாப்புப்படையினர், மற்றொருவனை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படையினருக்குக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் சத்ரிபோரா, வெஹில், நவ்கம், டங்கம் உள்பட பல்வேறு பகுதியில், நேற்று மாலை முதல் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பட்முரான் (Batmuran) பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவன் வீட்டினுள் பதுங்கியவாறு, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவனை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…