ராஜ்தானி ரயில் குண்டு வெடிப்பு குற்றவாளி ”டாக்டர் வெடிகுண்டு” மாயம்… அச்சத்தில் பொதுமக்கள்… விரைந்தது பாதுகாப்பு படை..

Published by
Kaliraj
  • பிரபல வெடிகுண்டு குற்றவாளி டாக்டர் ஜலீஸ் அன்சாரி திடீர் மாயம்.
  • வேறு ஏதேனும் சதிச்செயலுக்காக தப்பி ஓட்டமா? காவல்துறை தேடுதல் வேட்டை.
   கடந்த 1993ம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்தத வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி. இவர்  ‘டாக்டர் வெடிகுண்டு’ என்று பின்னாளில் அச்சத்தோடு அழைக்கப்பட்டார். இவருக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுளது. இந்நிலையில்  உச்ச நீதிமன்றம் இவருக்கு 21 நாள் பரோல்  வழங்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு பரோல் முடிவடைந்தது. இந்நிலையில்  நேற்று அதிகாலை மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்புப் படை (ஏ.டி.எஸ்), குற்றப்பிரிவு மற்றும் மும்பை காவல்துறையினர் அவரைத் தேடி மும்பை சென்ட்ரலில் உள்ள மோமின்புரா வீட்டுக்கு சென்றனர்.
ஆனால் அவர் வீட்டை  விட்டு வெளியேறிவிட்டதாகவும், திரும்பி வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அவர்கள், அன்சாரி வியாழக்கிழமை அதிகாலை தொழுகைக்காக சென்றார். ஆனால் அவர் திரும்பி வர வில்லை. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்து உள்ளனர். இதில், டாக்டர்  அன்சாரி கடந்த 1994-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார், அவர் ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்ததில் பங்கு வகித்ததற்காக  கைது செய்யப்பட்டார். எனினும் இவர் இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில்  பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.
இவர், ராஜஸ்தானில் உள்ள ஆறு இடங்களில் 1993 டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ரெயில்களில் குண்டுவெடிப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அஜ்மீர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை கைதி அதிலும் குண்டு வெடிப்பு தீவிரவாதியான இவரை விரைந்து கைது செய்து வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறை செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
Published by
Kaliraj

Recent Posts

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

10 minutes ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

8 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

9 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

12 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

12 hours ago