ஸ்ரீநகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று மாலை 6 மணியளவில், ஜம்மு காஷ்மீர் ஆயுதப்படை காவல்துறையின் ஒன்பதாவது பட்டாலியனின் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஜெவானில் உள்ள காவல் பயிற்சி முகாம் அருகே வந்தது.
இதற்கிடையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், மருத்துவமனையில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். காயமடைந்த 12 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஒரு போலீசார் உயிரிழந்தார்.
இதனால், தற்போது 11 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…