பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் , உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியுள்ளது .காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெற்று வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.மேலும் இந்த மாநாட்டில்,தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ,பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ( Jair Bolsonaro),சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக தீவிரவாதம் உள்ளது.தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். முறையான திட்டங்களை இதற்காக பிரிக்ஸ் அமைப்பு வகுக்க வேண்டும்.ரஷ்யா தீவிரவாதத்திற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தியாவும் ரஷ்யாவை போலவே பிரிக்ஸ் கூட்டமைப்பை வழி நடத்தும்.
கொரோனாவிற்கு பின் பொருளாதார ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் முன்னிலை வகிக்கும்.இந்தியாதான் உலகம் முழுக்க அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.நாடுகளுக்கு இடையிலான நட்பு பிரிக்ஸ் மாநாடு மூலம் வலிமையான நிலையை அடைந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…