உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம் – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Default Image

பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் , உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று  தொடங்கியுள்ளது .காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெற்று வருகிறது.

 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.மேலும் இந்த மாநாட்டில்,தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ,பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ( Jair Bolsonaro),சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக தீவிரவாதம் உள்ளது.தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். முறையான திட்டங்களை இதற்காக பிரிக்ஸ் அமைப்பு வகுக்க வேண்டும்.ரஷ்யா தீவிரவாதத்திற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தியாவும் ரஷ்யாவை போலவே பிரிக்ஸ் கூட்டமைப்பை வழி நடத்தும்.

கொரோனாவிற்கு பின் பொருளாதார ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் முன்னிலை வகிக்கும்.இந்தியாதான் உலகம் முழுக்க அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.நாடுகளுக்கு இடையிலான நட்பு பிரிக்ஸ் மாநாடு மூலம் வலிமையான நிலையை அடைந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்