Corona news : விளையாட்டு அரங்கை மருத்துவமனையாக மாற்றிய தெலுங்கா அரசு !

Default Image

தெலுங்கானாவில்  விளையாட்டு அரங்கை தற்காலிக மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானாவில் கச்சிபவுலி மைதானத்தை 1500 படுக்கை மற்றும் 50 ஐசியூ படுக்கை கொண்டு தற்காலிக மருத்துவமனையாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு 20 நாட்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்