மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண்ணை பல்கலைக்கழக மானியகுழு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 70,827 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
இந்த யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை யூஜிசி அறிவித்துள்ளது. இவை தவிர யூஜிசியின் இணையபக்கத்திலும் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக மானியக்குழு, மாணவர்கள், ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…