Categories: இந்தியா

Telangana: ஒரே நாளில் ரூ.5.5 கோடி அபாரதத் தொகை வசூல் ஆனால் நஷ்டம் 15 கோடி

Published by
Castro Murugan

தெலுங்கானா போக்குவரத்து காவல்துறையின் திடிர் சலுகையால் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய இ-சலான் மூலம் இன்று ஒரு நாளில் ரூ.5.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையில் 75% ,இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு 50%,மற்றொரு சலுகையானது கோவிட் தொற்றுநோய்களின் போது முகமூடிகளை அணியாததால் பெறப்படும் இ-சலான்களுக்கு 90% தள்ளுபடி மற்றும் தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்படும் சலான்களுக்கு 80% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பால் திகைத்துப்போன அபராத் தொகை செலுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 800 முதல் 1000 இ-சலான்களை செலுத்தி தெலுங்கானா போக்குவரத்து துறையை திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இதுபற்றி போக்குவரத்து ஆய்வாளர் (இ-சலான்) எம் நர்சிங் ராவ் கூறுகையில் “வாகன உரிமையாளர்களிடமிருந்து நிலுவையில் உள்ள இ-சலான்களை  தள்ளுபடியில் வசூல் செய்ய திட்டமிட்டு இருந்தோம்.இதில் எங்கள் இலக்கானது சுமார் 2 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்படும் என்று கணித்திருந்தோம்,ஆனால் எங்கள் கணிப்பை மீறி சுமார் 4.5 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சிரத்தையும் தந்துள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நிமிடத்திற்கு 1000 சலான்ங்கள் வரை செலுத்தப்பட்டதாக கூறினார்.இந்த மிகப்பெரிய ஆன்லைன் டிராபிக் காரணமாக இ-சலான் செலுத்தும் போது பயனர்கள் சில தொழிநுட்ப கோளாறுகளை எதிர்கொண்டனர்,ஆனால் அதிர்ஷ்டவசமாக முற்றிலுமாக செயலிழக்கவில்லை.

ஹைதராபாத் காவல்துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) ஏ.வி.ரங்கநாத் கூறுகையில்,இன்று பெறப்பட்ட இ-சலான்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும்,ஆனால் தள்ளுபடி காரணமாக சுமார் ரூ.கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

23 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

48 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago