தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய எல்லையில் தெலுங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் துணை போலீஸ் பாதுகாப்பு அதிகாரி அமீர்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஓட்டலில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்கு மண்டல ஹைதராபாத் நகர போலீஸ் டிசிபி ஜோயல் டேவிஸ் கூறுகையில், அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் துணை போலீஸ் பாதுகாப்பு அதிகாரி முகமது ஃபசல் அலி (60) என்பது தெரியாவந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. முகமது ஃபசல் அலி தற்கொலை செய்து கொண்டதற்கு நிதி மற்றும் குடும்பப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பிரேத பரிசோதனை இன்னும் செய்யப்படவில்லை. தடயவியல் குழு சம்பவ இடத்தில் உள்ளது என்று கூறினார்.
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…