தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணையில் நீர் மின்நிலையம் உள்ளது.
இங்குள்ள 6 அலகுகளில் தலா 150 மெகாவாட் வீதம் மொத்தம் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், மின்நிலையத்தின் ஒரு பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று யூனிட் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக பேனல் போர்டுகள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது 30 பேர் வேலை செய்து வந்துள்ளனர். விபத்து ஏற்பட்டதும் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்து காரணமாக கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 15 பேர் சுரங்க பாதை வழியாக தப்பி விட்டனர். 6 பேர் மீட்புக்குழுவின் மூலம் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உதவி பொறியாளர்கள் உள்பட 9 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது, மீதமுள்ள 3 பேரின் உடல்கள் மீட்கும் பணி நடைபெற்றது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…