கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் மாஸ்க் அணியாதவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெலுங்கானா தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்க்காக அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் கொரோனவால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 140 க்கும் அதிமானோர் புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை அங்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகரராவ் இது குறித்து பேசியபோது, வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு அணியாமல் வெளியில் வருபவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், மக்கள் அனாவசியமாக சாலைகளில் சுற்றி திரிந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…