தெலுங்கானா என்கவுண்டர் வழக்கு.. விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாத கால அவகாசம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தெலங்கானா என்கவுண்டர் வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை 6 மாதங்களாக உச்ச நீதிமன்றம் நீடித்தது.
ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு கால்நடை பெண் மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீவைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் பேரை கைது செய்து, அவர்களை என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்டர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை குழுவை அமைத்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் என்கவுண்டர் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
மேலும், தற்பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை நீடிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)