டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டபேரவை தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்தநிலையில் சந்திரசேகர் ராவ் மீண்டும் தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது தெலங்கானாவுக்கு என தனி உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் சந்திரசேகர் ராவ் முன்வைத்ததாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு ஏதுவாக தேசிய அளவில் 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சந்திரசேகர் ராவ், பிரிவினை அரசியல் மூலம் பா.ஜ.கவுக்கு உதவி புரிவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…