அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்..!

Published by
murugan

உத்தரபிரதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஷிக்ஷா மித்ரா என்பவர் 3-ம் வகுப்பு படிக்கும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஷிக்ஷா மித்ரா என்பவர் மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 3 ஆம் வகுப்பு சிறுமிகள் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் பல பெண்கள் பள்ளிக்கு வெளியே கூடி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறியபோது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த பள்ளி பிலாஸ்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரியரை குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதில் ஒரு சிறுமியின் தாயார் கூறுகையில், “நாங்கள் ஆசிரியர்களின் பாதுகாவலர்களாக நினைத்து பள்ளிக்கு அனுப்புகிறோம். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில், எங்கள் குழந்தைகளை படிக்க விட முடியாது. அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.

மற்றொரு பாதிக்கப்பட்ட சிறுமியின் தயார் கூறுகையில், தங்களை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று தங்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதாக தங்கள் குழந்தைகள் தெரிவித்தனர். எனது மகளுக்கு எட்டு வயதாகிறது, அவளால் பொய் சொல்ல முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

13 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

17 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

18 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

18 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

18 hours ago