மாணவிகள் ‘அதை’ செய்யவேண்டும்! மாணவர்கள் சிக்கன் கொண்டு வர வேண்டும்! – ஆசிரியரின் நூதன மிரட்டல்!

Default Image
  • சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் சிக்கன் கேட்டும், மாணவிகளிடம் பாலியல் தேவை பூர்த்தி செய்ய கூறியும் மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
  • அப்படி செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவதாக ஆசிரியர் மாணவர்களிடம் மிரட்டியதாக புகார் வந்துள்ளது.

சட்டிஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் நகரில் ஒரு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக  நடந்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்க்கு மறுத்தால் பொய் புகார்களை கூறி படிப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

அந்த ஆசிரியர் பெயர் ராஜேஷ் குமார் பரத்வாஜ். இவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் சிக்கன் கொண்டு வர சொல்லுவாராம். அதே போல மாணவிகளிடம் தனது பாலியல் தேவைகளை தீர்க்க சொல்லி வற்புறுத்துவார் என சில மாணவிகள் புகார் கூறி வறியுள்ளனர்.

அந்த ஆசிரியர் கூறியதை செய்யாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவார் என்று மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதற்கு அந்த ஆசிரியர் சார்பில், நான் அப்படி எல்லாம் கூற வில்லை. எனது வகுப்பு மாணவர்களை மகிழ்விப்பேன். என கூறியுள்ளார்.

இது குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅம்மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்