இந்தியாவில் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா குழுமம் திட்டம்! வெளியான தகவல்.!

Published by
Muthu Kumar

இந்தியாவில் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா குழுமம் இந்தியா முழுவதும், ஆப்பிள் இன்க் தயாரிப்புகளை மட்டுமே விற்கும் சுமார் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும் ஆப்பிள் முன்னணி விற்பனையாளர் ஸ்டார்களை(1000 சதுர அடி) விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ள செய்தியின்படி, ஆப்பிள் நிறுவனம் டாடாவுக்குச் சொந்தமான இன்பினிட்டி ரீடெய்ல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது, முன்னதாக டாடா குழுமத்துக்குச் சொந்தமான இன்பினிட்டி ரீடெய்ல் நிறுவனம், ‘குரோமா’ எனும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்களை நடத்தி வருகிறது.

இதன்மூலம் டாடா குழுமத்தின் இன்பினிட்டி ரீடெய்ல், ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற மறுவிற்பனையாளராக இருக்கும் மற்றும் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைவீதிகள் இருக்கும் இடங்களில் ஸ்டோர்களை அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிளின் சிறந்த விற்பனையாளர்களில் ஒன்றான தைவானின் விஸ்ட்ரான் நிறுவனத்துடன், டாடா நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக ப்ளூம்பெர்க் செப்டம்பர் மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

19 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

23 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

37 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

49 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago