கொப்பரை தேங்காய் கொள்முதலை உயர்த்த வேண்டும்.! பிரதமருக்கு கோரிக்கை வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

தென்னை விவசாயிகள் நலன் கருதி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தென்னை விவசாயிகள் நலன் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை அதிகப்படுத்த வேண்டும் என அதில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், தென்னை விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் 25 சதவீதமாக இருக்கும் கொப்பரை தேங்காய் உச்சவரம்பை 40 சதவீதமாக உயர்த்தவேண்டும் எனவும், 56 ஆயிரம் டன்னாக இருக்கும் கொப்பரை தேங்காய் உச்சவரம்பை 90 ஆயிரம் டன்னாக உயர்த்த வேண்டும்.  2019ஆம் ஆண்டு முதல் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஆரம்ப கால கொள்முதல் நிலவரம் படி, சந்தை விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட்டது. இதனை அடுத்து 2022க்கு பிறகு உற்பத்தி அதிகமாகியுள்ளது.

ஆதரவு விலை திட்டத்தின்கீழ்‌, நடப்பாண்டில்‌, 2023 ஏப்ரல்‌ முதல்‌ ஜூன்‌ வரையிலான மூன்று மாத காலத்திற்குள்‌, 56,000 மெட்ரிக்‌ டன்‌ என்ற இலக்கில்‌ 47,513 மெட்ரிக்‌ டன்‌: கொப்பரை கொள்முதல்‌ செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம்‌ இன்னும்‌ கொப்பரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும்‌, சந்தை விலை தொடர்ந்து குறைவாக இருப்பதாலும்‌, ஆதரவு விலைத்‌ திட்டத்தின்கீழ்‌ கொள்முதல்‌ செய்ய நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ள கொப்பரையின்‌ அளவை அதிகரிக்குமாறும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

2 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

2 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

3 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

14 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago